நட்பென்றும் மூப்படைவதில்லை
நட்பெனும் நீலவானில் கார்முகில்களாய் நாமிணைந்தோம் ,
இடி மழை மின்னலென உணர்சிகளில் துள்ளி குதித்தோம்,
கோடி நினைவெனும் முத்துக்களை ஆழியிதயங்களில் விதைத்திட்டோம்,
காலமெனும் காற்றடிக்க கண்கலங்க கைகுலுக்கி பிரிகின்றோம்,
தோழா-
மீண்டும் ஒருநாள் வாழ்வில் சந்திப்போமா தெரியவில்லை,
காரணம் மரணநாள் அறிந்து பிறந்தவன் எவனுமில்லை,
சந்தித்தாலும் மூப்புற்ற வெண்மேகமாயிருக்கலாம் கவலையில்லை,
புலன்கள் செயலிழப்பினும் நம்முயிரொத்த நட்பென்றும் மூப்படைவதில்லை..,
No comments:
Post a Comment